Thursday, May 2, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்ஆசியா சூடானில் அமைதிக்கான அறிகுறி இல்லை: ஐ.நா கவலை

சூடானில் அமைதிக்கான அறிகுறி இல்லை: ஐ.நா கவலை

1 minutes read

சூடானில் அமைதி திரும்புவதற்கான அறிகுறியே இல்லை என்றும் ஆட்சி அதிகாரத்தை ஆயுத பலம் மூலம் கைவசமாக்கலாம் என்ற நம்பிக்கையில் இருதரப்பும் போரிட்டு வருவதாகவும் ஐ.நா கவலை தெரிவித்துள்ளது.

சூடான் நாட்டில் கடந்த சில நாட்களாக இராணுவம் மற்றும் துணை இராணுவ படையினருக்கு இடையேயான மோதல் தீவிரமடைந்தது.

இதனால் சுமார் 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும் 3,500க்கும் மேற்பட்டோர் காயமடைந்தும் உள்ளனர்.

சூடானில் சிக்கியுள்ள வெளிநாட்டினரை மீட்க ஏதுவாக, 72 மணிநேர போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் இருந்தது. எனினும், அதனையும் மீறி இரு தரப்பினருக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது.

இதனால், சூடானில் உள்ள வெளிநாட்டை சேர்ந்தவர்களை மீட்கும் பணியில் அந்தந்த நாடுகள் கடும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றன.

இந்த பணியில் அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் இராணுவ உதவியுடன் நேரடியாக களத்தில் இறங்கி, தங்களது தூதர்கள் மற்றும் குடிமக்களை மீட்டு வருகின்றன.

இந்நிலையிலேயே, சூடானில் அமைதி நிலவ இராணுவம் மற்றும் துணை இராணுவ படையினர் தயாராக இல்லை என்று ஐ.நா கவலை தெரிவித்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More