சூடானின் தலைநகர் கார்டூமில் உள்ள மிக முக்கியமான மருத்துவ ஆராய்ச்சிக் கூடத்தை மோதலில் ஈடுபட்டுள்ள ஒருதரப்பு கைப்பற்றியுள்ளது.
இதனால் அங்கு ஆராய்ச்சிக்காக வைக்கப்பட்டுள்ள நுண்ணுயிரிகளால் ஆபத்து ஏற்படலாம் என்று உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து ஜெனீவாவில் உள்ள நிருபர்களுடன் வீடியோ வாயிலாக பேசிய சூடானில் உள்ள உலக சுகாதார அமைப்பின் பிரதிநிதி நிமா சயீத் விபரித்துள்ளார்.
ஆய்வகத்துக்குள் வல்லுனர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதுடன், உயிரியல் பொருட்கள் மற்றும் ஆய்வகத்தில் பொருட்களையும் போராட்டக்காரர்கள் பாதுகாப்பாக வைக்காமல் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, ஆய்வகத்தில் ஜெனரேட்டர் வசதி இல்லாததால், இரத்த மாதிரி கையிருப்புகள் கெட்டுப்போக வாய்ப்புள்ளதாகவும் ஆய்வக ஊழியர்கள் எச்சரித்துள்ளனர்.
தொடர்புடைய செய்தி : சூடானில் அமைதிக்கான அறிகுறி இல்லை – ஐ.நா