இலண்டனைச் சேர்ந்த ஒரு நபர், அதிகாலை நேரத்தில் நகரின் மையப்பகுதியில் உள்ள பூங்காவில் ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுளார்.
குற்றம் சாட்டப்பட்டவர் ட்ராவிஸ் மூர், அவருக்கு வயது 36. இலண்டன், ஹவுன்ஸ்லோவில் உள்ள கிரேட் வெஸ்ட் சாலையைச் சேர்ந்தவர் இவர்.
பாதிக்கப்பட்ட அதே நபருக்கு எதிராக மற்றுமொரு பாலியல் பலாத்காரக் குற்றச்சாட்டு மற்றும் ஒரு பாலியல் பலாத்கார முயற்சி குற்றச்சாட்டு ஆகியவ உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தச் சம்பவம் பெர்க்ஷயரில் உள்ள ஸ்லஃபில் இருக்கும் கோடோல்ஃபின் பொழுதுபோக்கு மைதானத்தில் நிகழ்ந்துள்ளது.
தேம்ஸ் வேலி பொலிஸாருக்கு வழங்கிய தகவலின்படி, இந்தச் சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 2) அதிகாலை 1.30 மணியளவில் நடந்ததாகக் கூறப்படுகிறது. மூர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டு, அடுத்த நாள் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.
அவரது அடுத்த விசாரணை டிசெம்பர் 1ஆம் திகதி ரீடிங் கிரவுன் நீதிமன்றத்தில் நடைபெறும்.