Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்ஆசியா மலேசியாவில் நீங்காத கொரோனா அச்சம்: அகதிகளின் நிலை என்ன? 

மலேசியாவில் நீங்காத கொரோனா அச்சம்: அகதிகளின் நிலை என்ன? 

1 minutes read

மலேசியாவில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பொது நடமாட்டத்திற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில், அகதிகள் பல பிரச்னைகளை சந்தித்து வருவதாகக் கூறப்படுகின்றது. 

இக்கட்டுப்பாட்டினால் அகதிகள் வேலைகளை இழக்கக்கூடிய ஆபத்திலும் வீட்டு வாடகையை செலுத்த முடியாததால் வீடுகளிலிருந்து வெளியேற்றக்கூடிய நிலையிலும் தவித்து வருகின்றனர். 

அகதிகள் வாழக்கூடிய சூழல் சமூக விலகலைப் பின்பற்றுவதற்கான வாய்ப்பை அவர்களுக்கு கொடுக்கவில்லை எனக் கூறுகிறார் அகதிகளுக்கான புகலிடம் அமைப்பின் நிறுவனர் ஹெய்டி குவா. ஒரு சிறு குடியிருப்பில் 15 அகதிகள் வரை வாழக்கூடிய நிலை நிலவுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

“தங்கள் குடும்பத்திற்கு வழங்க உணவு எதுவும் இல்லை என கடந்த சில நாட்களாக வேதனைமிக்க அழைப்புகள் எங்களுக்கு வருகின்றன,” என்கிறார் ஹெய்டி குவா. 

மலேசியாவில் பெரும்பாலும் தினக்கூலியை நம்பி வாழ்ந்து வந்த ரோஹிங்கியா அகதிகள், இக்கட்டுப்பாடு காரணமாக வருமானத்திற்கான தங்கள் வாய்ப்பை இழந்துள்ளனர் என்கிறார் ரோஹிங்கியா மனித உரிமை அமைப்பின் மலேசிய தலைவர் ஜாபர் அகமது அப்துல் கனி. 

“எமது மக்கள் எப்படி பிழைத்திருக்க போகிறார்கள் என்பதை என்னால் எண்ணிப்பார்க்க முடியவில்லை,” எனத் தெரிவித்திருக்கிறார் அப்துல் கனி. 

சமீபத்திய நிலவரப்படி, ஐ.நா. ஆணையத்திடம் பதிவுச் செய்த 178,980 அகதிகள் மற்றும் தஞ்சக்கோரிக்கையாளர்கள் மலேசியாவில் வாழ்ந்து வருகின்றனர். அதில் 154,080 பேர் மியான்மரிலிருந்து வெளியேறியவர்கள். மீதமுள்ள 24,900 அகதிகள பாகிஸ்தான், ஏமன், சோமாலியா, சிரியா, ஆப்கானிஸ்தான், இலங்கை, ஈராக் மற்றும் பாலஸ்தீனம் உள்ளிட்ட நாடுகளிலிருந்து வெளியேறியவர்களாவர். 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More