சீன அரசின் ஆதரவுடையது என குற்றம்சாட்டப்படும் ஊடுருவல் குழு ஒன்று இந்தியாவில் தேசிய தகவல் மையம் உட்பட அரசுகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், செய்தி நிறுவனங்கள் மற்றும் சிந்தனை அமைப்புகளை தாக்குவதாக குற்றம்சாட்டப்படுகிறது.
இந்த நிறுவனங்களுக்கு மின்னஞ்சல்களை அனுப்புவதோடு அவைகளை திறந்தால் இரகசியங்களை திருட பயன்படுத்தப்படுகிறது. ரெட்அல்பா என்று அழைக்கப்படும் இந்தக் குழு இந்திய அரசுக்கான தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பு மற்றும் சேவைகள் வழங்கும் தேசிய தகவல் மைய பக்கங்களுக்குள் தொடர்ந்து ஊடுருவி வருவதாகக் கூறப்பட்டுள்ளது.