Thursday, April 25, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை வவுணதீவில் ஊரடங்கு உத்தரவை மீறி பயணித்த சகோதரர்கள் மீது தாக்குதல்!

வவுணதீவில் ஊரடங்கு உத்தரவை மீறி பயணித்த சகோதரர்கள் மீது தாக்குதல்!

1 minutes read

மட்டக்களப்பு – வவுணதீவு பகுதியில் ஊரடங்கு உத்தரவை மீறி பயணித்த சகோதரர்கள் மீது வவுணதீவு பொலிசாரினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தாண்டியடி எரிபொருள் நிலையத்தில் நேற்று இரவு உந்துருளிக்கு எரிபொருள் நிரப்பிவிட்டு வீடு திரும்பிய இரு சகோதரர்கள் மீதே இவ்வாறு தாககுதல் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மோட்டார் வாகனத்தை நிறுத்தி பொலிஸ் அதிகாரியொருவர் துப்பாக்கியால் அவர்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.

காயமடைந்த இருவரும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், கண் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தபட்டுள்ளதாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ளதாக எமது பிராந்திய செய்தியார் தெரிவித்தார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More