Sunday, April 28, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை தமிழ்க் கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும்! – வவுனியாவில் மக்கள் போராட்டம்

தமிழ்க் கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும்! – வவுனியாவில் மக்கள் போராட்டம்

2 minutes read

ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு – கிழக்கு மாகாணத்துக்கு மீளப்பெற முடியாத சமஷ்டியை வலியுறுத்துவதற்கு அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் ஓரணியில் இணைய வேண்டும் எனக் கோரி வவுனியா – நெடுங்கேணியில் இன்று கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

நெடுங்கேணி நாகதம்பிரான் ஆலயத்துக்கு அருகாமையில் வடக்கு – கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, “தமிழ் அரசியல் கட்சிகளிடையே அரசியல் தீர்வுக்கான நடவடிக்கைகள் ஒருமித்த முறையில் முன்னெடுக்கப்பட வேண்டும்”, “அனைத்து தமிழ்க் கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டும்”, “வடக்கு, கிழக்கு மாகாணங்கள் மீள ஒருங்கிணைக்கப்பட்டு வடக்கு – கிழக்கு தனி மாகாண அலகாக உருவாக்கப்பட வேண்டும்” போன்ற பல்வேறு விடயங்களை உள்ளடக்கிய பதாதைகளை மக்கள் ஏந்தியிருந்தனர்.

போராட்டத்தின் இறுதியில் கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஊடகங்களுக்கு வாசித்துக் காட்டப்பட்டது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More