1
யாழ்., அச்சுவேலிப் பகுதியில் அநாதரவாக நின்ற மோட்டார் சைக்கிள் ஒன்று பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
அச்சுவேலி பிரதான வீதியிலுள்ள கூட்டுறவு கிராமிய வங்கி முன்பாக நேற்றிரவு முதல் இன்று காலை வரை மோட்டார் சைக்கிள் அநாதரவாக இருந்தது.
அதனால் சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் அச்சுவேலிப் பொலிஸாருக்குத் தகவல் வழங்கினர்.
அந்தத் தகவலுக்கமைய மோட்டார் சைக்கிளை மீட்ட பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.