மலேசியாவின் கோலாலம்பூருக்குச் சென்ற முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, 10 நாள்கள் மியன்மாரில் தங்கியிருப்பார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
முன்னதாக, அவர் சீனாவுக்கான விஜயத்தை மேற்கொண்டு மலேசியா சென்றுள்ளார் என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
எவ்வாறாயினும் கோட்டாபய மியன்மார் சென்றுள்ளார் என்றும், அங்கு அவர் மத ஸ்தலங்களில் வழிபாடுகளில் ஈடுபடவுள்ளார் என்றும் அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அண்மையில், கோட்டாபய ராஜபக்சவும் அவரது மனைவி அயோமா ராஜபக்சவும் கட்டுநாயக்க விமான நிலையத்தின் விசேட விருந்தினர் முனையத்தின் ஊடாகவோ, சாதாரண பயணிகள் முனையத்தின் ஊடாகவோ, பட்டுப்பாதை அல்லது தங்கப்பாதை ஊடாகவோ செல்வதற்கான வாய்ப்பு இருந்த போதும், அவர்கள் சரக்கு முனையத்தினூடாக மலேசியாவுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளனர்.