0
கிளிநொச்சி – செல்வாநகர், புதுக்குளம் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குளமொன்றில் சடலமொன்று காணப்படுகின்றது என்று பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்ட நிலையில் சம்பவம் தொடர்பில் சிறு குற்றப் பிரிவு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
செல்வாநகர் பகுதியைச் சேர்ந்த 53 வயதுடைய வெள்ளைக்கண்ணன் குணசேகரம் எனும் 6 பிள்ளைகளின் தந்தையே சடலமாக மீட்கப்பட்டார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.