Thursday, May 2, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை மன்னம்பிட்டி கோர விபத்தில் பல்கலை மாணவர்கள் இருவர் பலி!

மன்னம்பிட்டி கோர விபத்தில் பல்கலை மாணவர்கள் இருவர் பலி!

0 minutes read

பொலனறுவை – மன்னம்பிட்டி பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களில் பல்கலைக்கழக மாணவர்கள் இருவரும் உள்ளடங்குகின்றனர் என்று தெரியவந்துள்ளது.

பொலனறுவையிலிருந்து மட்டக்களப்பு – காத்தான்குடி நோக்கிப் பயணித்த பஸ் மன்னம்பிட்டி பாலத்தில் நேற்றிரவு விழுந்து விபத்துக்குள்ளானதில் 11 பேர் உயிரிழந்தனர். 41 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த விபத்தில் கிழக்குப் பல்கலைக்கழக தொழிநுட்ப பீடத்தில் கல்வி கற்கும் இரண்டு மாணவர்களும் சாவடைந்துள்ளனர்.

இதேவேளை, விபத்து தொடர்பில் பஸ் சாரதி இன்று கைது செய்யப்பட்டுள்ளார். அவர் காத்தான்குடிப் பகுதியைச் சேர்ந்தவராவார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More