“எமக்கு நிதி வேண்டாம்; நீதியே வேண்டும். அதற்காகவே நாம் போராடுகின்றோம்.”
– இவ்வாறு வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் தலைவி கலாரஞ்சினி தெரிவித்தார்.
கிளிநொச்சியில் இன்று ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில்,
“நிதிக்காகவோ, உதவிகளுக்காகவோ நாம் போராடவில்லை. காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் நீதிக்காகவே நாம் போராடி வருகின்றோம்.
சர்வதேச ரீதியாக நீதியைப் பெற்றுக்கொள்ள எமது போராட்டம் வாய்ப்பாக இருக்கும்.” – என்றார்.