Tuesday, April 30, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை சுமத்திரா தீவில் நில நடுக்கம்! – இலங்கைக்குச் சுனாமி அபாயம் இல்லை

சுமத்திரா தீவில் நில நடுக்கம்! – இலங்கைக்குச் சுனாமி அபாயம் இல்லை

0 minutes read

இந்தியப் பெருங்கடலில் வடக்கு சுமத்ரா கடற்பகுதியில் இன்று ஏற்பட்ட நில நடுக்கத்தால் இலங்கைக்குச் சுனாமி அபாயம் ஏதும் இல்லை என்று வளிமண்டலவியல் திணைக்களத்தின் தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் உள்ள கடலோரப்பகுதிகள் பாதுகாப்பாக உள்ளது என்றும் அந்த மையம் குறிப்பிட்டுள்ளது.

வடக்கு சுமத்ரா தீவுகளை சுற்றியுள்ள கடலில் இன்று காலை 10.49 மணியளவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இதையடுத்துத் தாம் விடுக்கும் அறிவிப்புகள் தொடர்பில் இலங்கையின் கரையோரப் பகுதிகளில் வாழும் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும் என்று வளிமண்டலவியல் திணைக்களத்தின் தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மையம் அறிவித்திருந்தது.

இந்நிலையிலேயே இலங்கைக்குச் சுனாமி அபாயம் இல்லை என்று அந்த மையம் பின்னர் அறிவித்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More