செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை தமிழ் பொதுவேட்பாளர் யோசனை: அடியோடு நிராகரித்தார் சம்பந்தன்!

தமிழ் பொதுவேட்பாளர் யோசனை: அடியோடு நிராகரித்தார் சம்பந்தன்!

0 minutes read
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் ஒருவரைக் களமிறக்க வேண்டும் என்ற யோசனையைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவருமான இரா.சம்பந்தன் எம்.பி. அடியோடு நிராகரித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழர்கள் சார்பில் பொதுவேட்பாளர் ஒருவரைக் களமிறக்க வேண்டும் என்ற முன்மொழிவுக்குத் தமிழ் மக்களிடத்தில் ஆதரவு கிடையாது.

இந்த முயற்சியானது தமிழ் மக்களுக்கான சாதகமான நிலைமைகளை உருவாக்காது.” – என்றார்.

எனினும், தமிழ் பொதுவேட்பாளர் விவகாரத்துக்குச் சில தமிழ்த் தேசியக் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. பிரதான கட்சியான இலங்கைத் தமிழரசுக் கட்சி இது தொடர்பில் எதிரான நிலைப்பாட்டிலேயே உள்ளது. சம்பந்தனின் நிலைப்பாடும் இதனையே பிரதிபலிக்கின்றது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More