செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை வலிகாமம் வடக்கு பிரதேச சபை மீண்டும் தமிழரசு வசம்! – தவிசாளராக சுகிர்தன் தெரிவு (படங்கள் இணைப்பு)

வலிகாமம் வடக்கு பிரதேச சபை மீண்டும் தமிழரசு வசம்! – தவிசாளராக சுகிர்தன் தெரிவு (படங்கள் இணைப்பு)

1 minutes read

யாழ். வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தவிசாளராக இலங்கைத் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த சோமசுந்தரம் சுகிர்தன் தெரிவானார்.

வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் உப தவிசாளரைத் தெரிவு செய்வதற்கான கூட்டம் இன்று வலிகாமம் வடக்கு பிரதேச சபை சபா மண்டபத்தில் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் திருமதி தேவந்தினி பாபு தலைமையில் நடைபெற்றது.

35 உறுப்பினர்களைக் கொண்ட வலிகாமம் வடக்கு பிரதேச சபைக்காக நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சி 11 ஆசனங்களையும், தேசிய மக்கள் சக்தி 9 ஆசனங்களையும், அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் 6 ஆசனங்களையும், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி மற்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி ஆகியன தலா 3 ஆசனங்களையும், ஐக்கிய மக்கள் சக்தி 2 ஆசனங்களையும், தமிழ் மக்கள் கூட்டணி ஓர் ஆசனத்தையும் கைப்பற்றியிருந்தன.

தவிசாளர் பதவிக்காக இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட சோமசுந்தரம் சுகிர்தன் 14 வாக்குகளையும், அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட பத்மநாதன் சாருஜன் 9 வாக்குகளையும் பெற்றனர்.

உப தவிசாளராக இலங்கைத் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த பொன்னுத்துரை தங்கராசா தெரிவானார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More