செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

நாட்காட்டி!

0 minutes read

திகதிகளின் ஒற்றைகளை மட்டுமே
கிழித்துப்போடும் எமக்கு
கடந்த பொழுதுகளின்
நிகழ்வுகளின் நினைவுகளை
மறந்துவிடத் தெரிவதில்லை.

நாட்கள் ஏனோ
அத்தனை
வேகமாகத்தான் போகிறது.

நிகழ்வுகளின்
நினைவுகள் மட்டும்
ஏனோ முடிவதில்லைத்தான்.

அழுகிறோம் .
சிரிக்கிறோம்.
அனலாகிறோம்.

ஆனாலும்
புதிதாய் வரும்
ஆண்டின் நாட்காட்டியை
ஏற்கத் துடிக்கும்
சுவரில் அறைந்த
ஆணிபோல் தான்
நாமும்!

 

நன்றி : நளாயினி தாமரைச்செல்வன் | கவிதை.காம்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.