Saturday, April 20, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home மகளிர் பெண்களை அழகு தேவதைகளாக மாற்றும் சமையலறை பொருள்!

பெண்களை அழகு தேவதைகளாக மாற்றும் சமையலறை பொருள்!

1 minutes read

பெண்கள் தங்கள் சருமத்தை பராமரிப்பதில் அதிக அக்கறையும், கவனமும் செலுத்துவார்கள். அதேபோல் முகத்தின் அழகை கூட்டுவதற்கு பல முயற்சிகளை மேற்கொள்வார்கள். இதன் காரணமாகவே பல மணிநேரம் கண்ணாடி முன்பு நின்று தங்கள் அழகை சோதனை செய்கிறார்கள்.

முகத்தின் அழகை அதிகரிப்பதற்காக சில பெண்கள் கிரீம்களை பயன்படுத்துவார்கள். மேலும், கிரீம்களை பயன்படுத்துவதால் முகத்திற்கு பாதிப்புகள் தான் அதிகம் வரும்.

ஆனால் மிகப்பெரிய ஒரு உண்மை என்னவெனில், நம் வீட்டின் சமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டே சருமத்தை எளிதாக பராமரித்து அதன் அழகை மேம்படுத்த முடியும்.

அந்த வகையில் உணவிற்கு சுவையைத் தர பயன்படும் உப்பு, அழகை அதிகரிக்க பெரிதும் உதவியாக இருக்கின்றது. அதாவது, வெறும் உப்பை பயன்படுத்தி சருமத்தில் உள்ள பழுப்பு நிறத்தை சரிசெய்யலாம்.

எவ்வாறு பயன்படுத்தலாம்?

1/2 கப் ஆலிவ் ஆயில், 1/4 கப் உப்பு ஆகியவற்றை ஒன்றாக கலந்து, குளிக்கும் முன் முகத்தில் தடவ வேண்டும். பின்னர் மென்மையாக சிறிது நேரம் ஸ்க்ரப் செய்து கழுவினால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் வெளியேறி சரும பொலிவு அதிகரிக்கும்.

2 டீஸ்பூன் கல் உப்புடன், 4 டீஸ்பூன் தேன் சேர்த்து அவற்றை கலந்து சருமத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும். அதன்பின்னர் கழுவினால் சருமத்தில் எண்ணெய் உற்பத்தியை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள உதவும்.

கண்களை சுற்றியுள்ள கருவளையம் போக ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெயில் மஞ்சள்பொடி, சிறிதளவு உப்பு கலந்து மசாஜ் செய்தால் கருவளையம் காணாமல் போய் விடும்.

நன்றி : குளோபல் தமிழ் நியூஸ்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More