Wednesday, April 24, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home மகளிர் திருமணத்துக்கு பின் மனைவியிடம் கணவன் இதெல்லாம் கேட்கவே கூடாதாம்

திருமணத்துக்கு பின் மனைவியிடம் கணவன் இதெல்லாம் கேட்கவே கூடாதாம்

1 minutes read

திருமணத்திற்கு பின்..

கணவன் மனைவி திருமணத்திற்கு பின் பல சண்டை சச்சரவுகள் ஏற்படும். அதற்கு காரணமே இருவருக்கான புரிதல் பின்னர் குறைந்துவிடுவது தான். திருமணத்திற்கு பின் கணவன் மனைவி இருவருக்குமே அடிக்கடி சண்டை ஏற்படும். ஏன் திருமணம் செய்தோம் என தோன்றும்.

இதற்கு காதல் திருமணம் செய்தவர்களும் அதிகம். காரணம் திருமணம் முடிந்த சில நாட்களிலேயே நம் துணையின் மைனஸ்களை மட்டுமே பார்க்க ஆரம்பித்துவிடுகிறோம்.

முதலில் அதை நிறுத்த வேண்டும். அடிப்படையாக அவர்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு மதிப்பளிக்க வேண்டும். மேலும், ஒருவரைத் திருமணம் செய்வதற்கு முன்பு அவரது பொருளாதார நிலைமை எவ்வாறு உள்ளது என்று தெரிந்து கொள்ள வேண்டும்.

பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் இருந்தால், அதை மேம்படுத்துவதற்கான வழிகள் பற்றி இருவரும் கலந்தாலோசித்து செயல்படலாம்.

இருவருக்கும் உள்ள தனிப்பட்ட பழக்கவழக்கங்கள், அவற்றில் நன்மை தருபவை. இருவருக்கும் பாதிப்பு ஏற்படுத்துபவை, எதிர்மறையான பழக்கங்கள் இருந்தால் அவற்றை தவிர்ப்பதற்கான வழிகள் என அனைத்தையும் பேசி முடிவு செய்ய வேண்டும்.

தம்பதிக்குள் இருக்கும் நெருக்கம் தனிப்பட்டது. இதில் பிறரின் தலையீடு எப்போதும் இருக்கக்கூடாது. கணவன்-மனைவி இருவருக்குமான தனிப்பட்ட விஷயங்களில் வேறு எந்த நபரையும் நுழைய விடாமல் கட்டுப்பாட்டோடு இருக்க வேண்டும்.

கணவன்-மனைவி உறவுக்குள் இருக்கக் கூடாதது தயக்கம். இருவரும் தங்கள் தேவை என்ன, எதிர்பார்ப்பு என்ன என்பதை, எவ்வித தயக்கமோ, கூச்சமோ இல்லாமல் தங்கள் துணையிடம் சொல்ல வேண்டும்.

கணவன், மனைவி இருவருமே, அவ்வப்போது ஏதாவது திடீர் பரிசு கொடுத்து அசத்தலாம். அது பணம் செலவழித்து வாங்கும் பொருளாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை.

நன்றி | வவுனியா நெற்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More