Thursday, March 28, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்இலக்கியச் சாரல் கவிதை | என் அப்பா | முல்லை அமுதன்கவிதை | என் அப்பா | முல்லை அமுதன்

கவிதை | என் அப்பா | முல்லை அமுதன்கவிதை | என் அப்பா | முல்லை அமுதன்

1 minutes read

26439017089377250834

அப்பாவின்

மரணம்

என்னை உலுப்பிவிட்டிருந்தது.

யார் யாரோ வந்தார்கள்.

போனார்கள்.

கூட்டமாய்

பெண்கள் அழுதனர்…

ஆண்கள் அப்பா

பற்றிய கதைகளை

தங்களுக்குள்

பேசிக்கொண்டனர்.

 

தலைவிரி கோலமாய்

அம்மா

அழுதுகொண்டிருப்பது

துல்லியமாய் தெரிந்தது.

அப்பாவின் மரணம்

நிகழ்ந்திருக்கக்கூடாது.

 

ஆனா

சொல்லித்தந்த விரல்கள்…

அடிக்கடி

தலையில்

வைத்து

நல்லாய் இரு

என்கிற கைகள்..

கட்டியணைத்த படி

தூங்குகையில்

நெஞ்சின் மயிர்க்காட்டை

துளாவியபடி

தூங்கிப்போகிற சுகம்…

கதைகள் பல

சொல்லி

நல்லவளாய் இரு

என்று சொல்லி

மகிழும் அவரின்

புன்னகைத்த முகம்…

கணக்கில்

எப்போது

கேள்வி கேட்டாலும்

அமைதியாய் சொல்லித்தரும்

அப்பாவின்

மரணம்

நிகழ்ந்திருக்கக்கூடாது.

 

ருதுவான போது

கைகளில்

அள்ளி

என் மகள்

என்று சந்தோசித்த பொழுதுகள்…

நிறையவே பிடிக்கும்…

அவரின் நெருக்கம்

எனி…

யாரோ இருவரின்

சண்டையில்

குறுக்கே வந்த

அப்பாவின்

கழுத்தை

பதம்

பார்த்த அந்த

யாரோவின் கத்தி

என் அப்பாவை

மரணமாக்கியது..

என் அப்பா

எனக்கு வேண்டும்..

 

யாரும்

அண்ணனாகலாம்..

யாரும்

யாருமாகலாம்.

அப்பா..

என் அப்பா..

 

– முல்லை அமுதன் – 

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More