1
வானம் தேடிடா பறவை அவள்
என்னை நிழலாய் சுற்றும் நிலவானவள்!
காற்றாய் நிலையாய் நிறைந்தவள்!
என் இதய இயங்குதிசையானவள்
என்னுள் தெளிவானவள்!
பாலை வன நிலம் போன்ற மனதில்
பசுமை பூக்க மழையாய் வந்தவள்!
நொடி பொழதிலும் என்னை பிரிய முடியாதவள்
என் கண்ணோடு பிணைந்தவள்!
உடலைக் கொடுத்தால் மண்ணில் கெட்டுப்போகும்
உயிரைக் கொடுத்தால் விட்டுப்போகும் உறவு என்று
உணர்வைக் கொடுத்து என் வாழ்க்கையின்
இறையாக வந்தாள் என் ஆனந்த மனைவியாக!
– திருமதி பி லாவண்யா ஜெகன்நாதன் தமிழ்நாடு –
