பாசறையில் பூத்து
கல்லறைகளில் உறங்கும்
மாவீரர்களே…………
நீங்கள் ஒடுக்கப்பட்ட
நம் தமிழினத்திற்காக
மண்ணிற்க்குள்
புதைக்கப் பட்டு,
விதைக்கப் பட்டவர்கள்.
நீங்கள் மண்ணிற்க்குள்
புதைக்கப் படவில்லை
நமது தாயகமெனும்
கட்டிடத்திற்க்கு
உறுதியான
அத்திவாரமாக்கப் பட்டவர்கள்.
மண்ணிற்க்குள்
விதைக்கப்பட்ட உங்களின்
கனவுகள் எரிமலைகளாக
குமுறிக்கொண்டிருக்கின்றன
நாளை நிச்சயம்
எரிமலைகள் வெடித்துச் சித்றும்
அப்போது உங்கள்
ஆசைகள் நிறைவேறும்
உறங்குங்கள்
அமைதியாக அதன்பின்பு!!
நன்றி : சுட்டிப்பையன் | தமிழ்மன்றம்