செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் கவிதை | மொழி | பா. உதயன்

கவிதை | மொழி | பா. உதயன்

0 minutes read

காற்றுக்கும் மொழி உண்டு
கடலுக்கும் மொழி உண்டு
காலையில் தினம் பாடும்
பறவைக்கும் மொழி உண்டு

மலை கூடி மொழி பேசும்
மௌனமாய் கவி பாடும்
அழகான நதி வந்து
அதனோடு கதை பேசும்

அமுதான தமிழ் போல
அந்த குருவிக்கும் மொழி உண்டு
மலர் கூட மொழி பேசும்
மனதோடு இசை பாடும்

அழகான கிளி எல்லாம்
அமுதமாய் தமிழ் பேசும்
அருகோடு குயில் வந்து
அதனோடு சுரம் பாடும்

மழை கூடி தினம் வந்து
மலரோடு கதை பேசும்
இரவோடு இது பேசும்
மொழி எல்லாம் தனி ராகம்

சிற்பியின் உளியோடு
சிலை கூட மொழி பேசும்
அவனோடு தனியாக
அது பேசும் மொழி வேறு

அழகான பாவங்கள்
அசைந்து ஆடும் ராகங்கள்
மனதோடு அது பேசும்
மனிதர்க்கு மட்டும் தான்
மொழி என்று எவன் சொன்னான்

இயற்கையின் மொழி எல்லாம்
இறைவனின் படைப்பாகும்
இது பேசும் மொழி எல்லாம்
இதயத்தின் கனவாகும் .

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.