செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் கனவில் உதிரும் கணக்கு | வில்லரசன்

கனவில் உதிரும் கணக்கு | வில்லரசன்

0 minutes read

பல நாள் கழித்து
ஊர் திரும்பும் பறவையின்
நினைவில் வந்தமர்கின்றன
மழையில் நனைந்து போயிருக்கும்
அஞ்சலிச் சுவரொட்டிகளும்
நினைவில் கலைய
மறுக்கும் விசேஷ உருவங்களும் ..

சர்க்கரை பூசணிகளின்
தலைபிளக்கப்பட்டு பூசப்பட்ட
குங்குமக் குருதியில்
அச்சம் பரவி
அலைகிறது தெருவெங்கும்
பலி பற்றிய பயத்தில்
இருளில் ஒடுங்கிப் போயிருக்கிறது ஊர் முழுவதும்..

ஊர் முழுக்க அலைந்து
திரியும் ஆவிக் கதைகளை
மறந்து விட்ட பறவை
மரணத்துக்கு பிறகான
தன் வாழ்வை பற்றிய
கனவில் உதிர்ந்து எறிகிறது
அன்றைய நாளின் கணக்கை…

வில்லரசன்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.