March 26, 2023 11:09 am

பார்வையற்றவர்களின் அகம் ஒளியாலானது | தேன்மொழிதாஸ்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email


எதன் பெயரையும் நீங்கள் எப்படியும் அழைக்கலாம்
எவ்வளவு சுருக்கியும்
மொழியை நீக்கியும் இனிமை நீக்கியும்
நான் என்பது எதற்குள்ளும் உண்டு
ஒரு இலை கூட
சுயமின்றி சுருள்விரிவதில்லை
ஒவ்வொரு இலையும் பல நாமங்களால் அழைக்கப்படலாம்
நாம் யாவரும் எதனுடனும் ஒப்பிட்டாலும் ஒப்புமையற்றும் இருப்போம்
யாவும் இல்லாதுமிருக்கும்
கடலை விட்டு வெளிவரமுடியாத உயிரும்
காடுகளை விட்டு வாழத்தெரியாத உயிரும்
வித்தியாசமான சூட்சும ஞானம் கொண்டவை
இசையை உயிரும் உயிரற்ற எதுவும் எழுப்பும்
ஆனால் காற்றின் மூலமின்றி உணர்தல் அரிது
நிலைநிறுத்தி வைக்கப்பட்ட காற்றின் எடை
எவ்வகையிலேனும் காலாவதியாகும்
காற்றின் சதையை பாடல் அறியும்
ஒரு சிறந்த கவிஞன்
தன் வார்த்தைகளில் உதிரமுடியாத வாசனையை மலரவிடுவான்
பார்வையற்றவனின் அகம் ஒளியாலானது

கவிதை – தேன்மொழிதாஸ்
28.11.2022 4am

ஓவியம்: தேன்மொழிதாஸ்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்