தேன் .
வறண்ட தொண்டைக்கு சிகிச்சை அளித்திட இது ஒரு சிறந்த சிகிச்சையாக விளங்கும். தேன் என்பது இயற்கையான முறையில் குணப்படுத்தும் என்ஸைம்களால் நிறைந்தஇது தொண்டைக்கு இதமளிப்பதோடு, இருமலை தூண்டும் காரணிகளையும் போக்கும்.
சிறந்த பலனைப் பெற அதனை அப்படியே சாப்பிடுவது நல்லது. அப்படி இல்லையென்றால் அதில் எலுமிச்சை ஜூஸை பிழிந்து, தேவைப்படும் போது அதிலிருந்து 1 ஸ்பூன் குடியுங்கள்.
மூலிகை தேநீர் பருகுங்கள்
வறண்ட தொண்டைக்கான பழமையான சிகிச்சைஇது தொண்டை வறட்சியை போக்கும். சூடான தேநீரை பருகும் போது அதிலுள்ள வெப்பம், என்ஸைம்களை காற்று பாதைக்குள் நுழையச் செய்யும். அதற்கு இந்த தேநீரை தயாரிக்க, சூட்டை தாங்கும் கப்பை எடுத்துக் கொள்ளுங்கள்.
ஒரஞ் ஜூஸ்
இந்த பானம் எலக்ட்ரோலைட்ஸ்களை திருப்பி கொடுக்கும். இது போக வறண்ட வாய்க்கு ஈரப்பதத்தையும் அளிக்கும். ஒரு ஸ்பூன் உப்பு, ஒரு ஸ்பூன் சர்க்கரை, அரை ஸ்பூன் பேக்கிங் சோடா மற்றும் கொஞ்சம் எலுமிச்சை அல்லது ஒரஞ் ஜூஸை ஒரு டம்ளர் தண்ணீருடன் சேர்த்துக் கொள்ளவும்.
அடிக்கடி சூப் குடியுங்கள்
சூப்பும் கூட வாய்க்கு ஈரப்பதத்தை அளித்து, எலக்ட்ரோலைட்ஸ் அளவை சமநிலைப்படுத்தும். வறண்ட தொண்டை என்பது டீ-ஹைட்ரேஷன் அறிகுறியாக இருக்கலாம். அப்படியானால் அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும் என்ற சிக்னலை உங்கள் உடல் அடிக்கடி பெறும்.
ஆவி பிடிப்பது
வறட்சியான வானிலை அல்லது ஏ.சி-யில் இருந்து வரும் காற்றை சுவாசிப்பதால் வறண்ட தொண்டை ஏற்படலாம். அதனால் ஆவி பிடிப்பது சிறந்த சிகிச்சையாக செயல்படும்.