செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home மருத்துவம் பசளி கீரையின் மருத்துவ பயன்

பசளி கீரையின் மருத்துவ பயன்

1 minutes read

பசளி அல்லது பசளிக்கீரை என்பது வெப்பமண்டலத்தில் உள்ள பல்லாண்டுக் கொடித் தாவரமாகும். இது பொதுவாக இலைக் காய்கறியாக பயன்படுத்தப்படுகின்றது. இது ஒரு மூலிகைத் தாவரமும் ஆகும்.இது வேகமாக வளரும், மெதுமையான தண்டுடனான கொடி கொண்ட, 10 மீட்டர் (33அடி) நீளம் கொண்டதாகும். இது தடிப்பான, அரை சதைப்பற்றுள்ள, கார மிகுதியற்ற, பிசுபிசுப்பு நூலியமைப்புக் கொண்ட இதய வடிவ இலையைக் கொண்டது. இதன் தண்டு கருஞ்சிவப்பு நிறமுடையது.பாலக் கீரை (அ) பசலைக்கீரை எளிதில் செரிமானமாகும் கீரைகளுள் ஒன்று. இந்த கீரை குளிர்ச்சி தரக்கூடியது. எரிச்சலைத் தணிக்கின்றது. இதில் தண்ணீரில் கரையக்கூடிய ஒரு வகைப் புரதச்சத்து உள்ளது. மேலும் வைட்டமின் ‘ஏ’, ‘பி’, ‘சி ‘ ஆகியனவும், பொட்டாசிய உப்பின் காரச்சத்தும் அதிக அளவில் உள்ளன. இந்தக் கீரையில் முக்கியமான 10 நன்மைகள் பற்றி இங்கு காண்போம்.

பசலைக் கீரையில் இரும்பு சத்து அதிகம் உள்ளது, இதில் உள்ள இரும்புச் சத்து மிகவும் சுலபமாக ஜீரணமாகி உடம்பில் ஒட்டுகின்றது. எனவே ரத்த சோகை நோயாளிகளுக்கு அது மிகவும் பயன் தருகின்றது.பாலக் கீரையுடன் வேப்பிலை, ஓமம், மஞ்சள் ஆகியவற்றைச் சேர்த்து கஷாயமாக்கிச் சாப்பிட்டால் பெருவயிறு குறையும்.நீரிழிவு நோயாளிகளுக்கு இந்த கீரை மிகவும் சிறந்தது. ஏனெனில் இரத்ததில் உள்ள சர்க்கரையின் அளவை நிலையாக வைத்திருக்க இந்த கீரை உதவுகிறது.

புற்று நோய் செல்கள் உருவாகாமல் தடுத்து நிறுத்த கூடியது. பாலக் கீரை ரத்த சிவப்பு அணுக்களை அதிகமாக உற்பத்தி செய்வதால் இது அனிமீயா நோய் வராமல் தடுக்க உதவுகிறது.
பாலக் கீரையில் போலிக் ஆசிட் அதியளவில் உள்ளதால் கர்பிணிகள் இதனை அதிகம் எடுத்துக் கொண்டால் நல்லது.
குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் தாய்மார்கள் இந்த கீரையை அதிகம் சாப்பிட்டால் பால் அதிகம் சுரக்கும்.
இதில் மெக்னீசியம், ஜின்க், காப்பர் மற்றும் விட்டமின் – கே அதிகம் உள்ளதால் எலும்புகள் மற்றும் பற்கள் உறுதியாக உதவுகின்றன.

இந்த கீரையில் புரத சத்து நிறைந்துள்ளது, எனவே இந்த கீரையை தினமும் எடுத்து கொண்டால் மாரடைப்பு, ரத்த குழாய்கள் அடைப்பு போன்ற இதய நோய்கள் வராமல் தடுக்கலாம்.
கண் பார்வை நன்றாக தெரிய இந்த கீரை உதவி செய்கின்றன.பாலக்கீரையில் வைட்டமின் ஏ அதிக அளவில் உள்ளதால் இது கண்பார்வைக்கு மிகவும் சிறந்தது. கண் நோய்களான மாலைகண் நோய் மற்றும் கண்களில் ஏற்படும் அரிப்பு போன்றவை வராமல் தடுக்க வல்லது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.