செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home மருத்துவம் மழைக்காலத்தில் சாப்பிடக்கூடாத உணவுகள்!

மழைக்காலத்தில் சாப்பிடக்கூடாத உணவுகள்!

1 minutes read

இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறையில் பெரும்பாலானோர் பணத்தைப் பின்னால்தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், தங்களது ஆரோக்கியத்தை புறக்கணித்து விடுகின்றனர்.

இதன் விளைவாக பல்வேறு நோய்கள் அதிகரித்து வரும் நிலையில், மழைக்காலத்தில் நோய்த்தொற்றுகளும் எளிதில் பரவும் அபாயம் அதிகமாக உள்ளது.

மழைக்காலத்தில் உடலின் நோயெதிர்ப்பு திறன் சற்று குறைவதால், உணவில் கூடுதல் கவனம் தேவைப்படுகிறது.

குறிப்பாக சில உணவுகளை ஒன்றாக உட்கொள்வது உடலுக்கு தீங்கான விளைவுகளை ஏற்படுத்தும். அவை என்னென்ன என்பதை பார்ப்போம்:

⚠️ மழைக்காலத்தில் தவிர்க்க வேண்டிய உணவுக் கூட்டங்கள்

டீ + வறுத்த ஸ்நாக்ஸ் (பக்கோடா, சமோசா)

டீயுடன் பக்கோடா அல்லது சமோசா சாப்பிடும் பழக்கம் இருந்தால் தவிர்க்கவும். இது அசிடிட்டி, வாய்வு தொல்லை மற்றும் சோர்வை ஏற்படுத்தும்.

பால் + மாங்காய்

மாங்காய் சாப்பிட்ட பின் பால் குடிப்பது அல்லது பால் குடித்த பின் மாங்காய் சாப்பிடுவது முகப்பரு, வயிற்று உப்புசம் போன்ற பிரச்சனைகளை உருவாக்கும்.

பொரித்த உணவுகள் + குளிர்ந்த மோர்

பொரித்த உணவுகளுக்குப் பிறகு குளிர்ந்த மோர் குடிப்பது கொழுப்பு செரிமானத்தை குறைத்து, நெஞ்செரிச்சலை ஏற்படுத்தும்.

பருப்பு வகைகள் + குளிர்ந்த தயிர்

பருப்பு வகைகளை உட்கொண்ட பின் குளிர்ந்த தயிரை சாப்பிடுவது செரிமானத்தை மெதுவாக்கி, வயிற்று உப்புசத்தை அதிகரிக்கும்.

பழங்கள் + மீல்ஸ் (சாதம்/தாள்/ரொட்டி)

முழு உணவு சாப்பிட்ட பின் உடனே பழங்களை சாப்பிடுவது குடலில் புளிப்பு ஏற்படுத்தி, வாய்வு தொல்லை மற்றும் உப்புசத்தை உண்டாக்கும்.

பால் + வாழைப்பழம்

பாலுடன் வாழைப்பழம் சேர்த்து சாப்பிடுவது செரிமானத்தை மெதுவாக்கி, வயிற்று உப்புசம் மற்றும் சைனஸ் பிரச்சனைகளை தீவிரப்படுத்தும்.

மீன் + தயிர்

தயிரும் மீனும் ஒன்றாக உட்கொள்வது உடலில் நச்சுத்தன்மை உருவாக்கி, சருமத்தில் அழற்சி ஏற்படும் வாய்ப்பை அதிகரிக்கும்.

முளைக்கட்டிய பயிர்கள் + தயிர்

இரண்டும் குளிர்ச்சியான உணவுகள் என்பதால், ஒன்றாக உட்கொண்டால் செரிமானத்தை பாதித்து வாய்வு தொல்லையை உருவாக்கும்.

பழைய சாதம் + தயிர்

சாதாரண காலங்களில் இது நல்லது என்றாலும், மழைக்காலத்தில் குடல் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.

தர்பூசணி + பிற உணவுகள்

தர்பூசணியை எப்போதும் தனித்துதான் சாப்பிட வேண்டும். மற்ற உணவுகளுடன் சேர்த்தால் நொதித்தலால் வயிற்றுப்போக்கு ஏற்படும்.

மழைக்காலத்தில் இவ்வாறு தீங்கு விளைவிக்கும் உணவுக் கூட்டங்களைத் தவிர்த்து, ஆரோக்கியமான உணவுகளை மட்டும் உட்கொள்ளுங்கள். இதனால் நோய்த்தொற்று அபாயத்தை குறைத்து, உடல்நலத்தை பாதுகாத்துக் கொள்ளலாம்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.