Saturday, April 27, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை தமிழ் மக்களின் வாக்குகள் ரணிலுக்கே! – ரவி (நேர்கண்டவர்:- தமிழ்மாறன்)

தமிழ் மக்களின் வாக்குகள் ரணிலுக்கே! – ரவி (நேர்கண்டவர்:- தமிழ்மாறன்)

1 minutes read

“எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு – கிழக்கு தமிழ் மக்களின் வாக்குகள் ரணில் விக்கிரமசிங்கவுக்கே கிடைக்கும். 2005 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் விட்ட வரலாற்றுத் தவறை தமிழ் மக்கள் மீண்டும் ஒரு தடவை விடமாட்டார்கள்.”

– இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

இலங்கை அரசியலில் சூடுபிடித்துள்ள ஜனாதிபதித் தேர்தல் விவகாரம் தொடர்பில் ரவி கருணாநாயக்கவிடம் ‘வணக்கம் இலண்டன்’ வினவியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஜனாதிபதித் தேர்தல் இவ்வருடம் நடைபெற்றே தீரும். தேர்தலை ஒத்திவைக்கும் எண்ணம் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு இல்லை. ஏனெனில், நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளராகப் போட்டியிடவுள்ள ரணில்தான் வெற்றியடையப் போகின்றார். எனவே, அவருக்குத் தேர்தலை ஒத்திவைக்க வேண்டிய தேவையில்லை. அவரின் வெற்றி சரித்திர வெற்றியாகப் பதியப்படும்.

சிங்கள மக்களுக்கு மாத்திரமில்லாமல் தமிழ், முஸ்லிம் மக்களின் நம்பிக்கை மிகுந்த தலைவராக ரணில் விளங்குகின்றார்.” – என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More