Thursday, April 25, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா “வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்’ ரயில் வரலாற்றில் முதல் பெண் ஓட்டுநர்

“வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்’ ரயில் வரலாற்றில் முதல் பெண் ஓட்டுநர்

1 minutes read

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்:

இந்தியாவில் நவீன வசதிகளுடன் கூடிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. அதன் வரலாற்றில் முதன்முறையாக பெண் ஓட்டுநர் ஒருவர் பணியில் அமர்த்தப்பட்டு உள்ளார்.

மும்பையில் இருந்து புனே, சோலாப்பூர் வழியே செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலின் ஓட்டுநராக சுரேகா யாதவ் பணியாற்றுவார்.

இதுபற்றி மத்திய ரயில்வே மந்திரி அஷ்வினி வைஷ்ணவ் வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், நாரி சக்தியால் (பெண் சக்தி) வந்தே பாரத் ரெயில் இயக்கப்படுகிறது என தெரிவித்துள்ளார்.

புதுடெல்லியில் இருந்து கான்பூர், அலகாபாத் வழியாக வாரணாசி வரை செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் 2019ஆம் ஆண்டு பெ்ரவரியில் முதன்முறையாக, கொடியசைத்து தொடங்கி வைக்கப்பட்டது.

இதன்பின்னர், 2ஆவது ரெயில் புதுடெல்லியில் இருந்து ஸ்ரீ மாதா வைஷ்ணவ தேவி கத்ரா இடையே 2019ஆம் ஆண்டு ஒக்டோபரில் தொடங்கி வைக்கப்பட்டது.

தொடர்ந்து, காந்திநகர் மற்றும் மும்பை சென்டிரல் இடையேயான புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட தொழில் நுட்பத்துடன் கூடிய 3ஆவது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில், பிரதமர் மோடியால் கடந்த 2022ஆம் ஆண்டு செப்டம்பரில் தொடங்கி வைக்கப்பட்டது.

இணைய விளையாட்டால் உயிர்மாய்க்க முயற்சித்த யாழ். மாணவன்!

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More