Saturday, May 4, 2024

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை வியட்நாமில் உயிரிழந்த இலங்கையரின் சடலம் நாட்டுக்கு!

வியட்நாமில் உயிரிழந்த இலங்கையரின் சடலம் நாட்டுக்கு!

1 minutes read

வியட்நாமில் தற்கொலை செய்துகொண்ட, யாழ்., தென்மராட்சி, சாவகச்சேரியைச் சேர்ந்த சுந்தரலிங்கம் கிரிதரனின் சடலம் இன்று (17) விமானம் மூலம் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக நீர்கொழும்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

உடற்கூற்றுப் பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளது.

அண்மையில், 300 க்கும் மேற்பட்ட இலங்கையர்களுடன் கனடா செல்ல முற்பட்டிருந்த கப்பல் வியட்நாம் கடற்பரப்பில் தத்தளித்துக்கொண்டிருந்தது.

அதையடுத்து அவர்களை ஜப்பான் கடற்படையினர் மீட்டு வியட்நாமில் கரை சேர்த்தனர். அங்கு முகாமில் தடுத்து வைக்கப்பட்டனர். அவர்களை இலங்கைக்கு அனுப்புவதற்கான முயற்சிகளை வியட்நாம் அதிகாரிகள் மேற்கொண்ட நிலையில், அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இரண்டு இலங்கையர்கள் தற்கொலைக்கு முயற்சித்திருந்தனர்.

உடனடியாக இருவரும் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில், ஒருவர் ஆபத்தான கட்டத்தில் இருந்ததையடுத்து அவர் உயிரிழந்தார்.

இவ்வாறு உயிரிழந்தவரின் சடலத்தைத் தம்மிடம் ஒப்படைக்குமாறு உறவினர்கள் கோரிக்கை விடுத்ததையடுத்து, நீண்ட நாட்களின் பின்னர் சடலம் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More