யாழ்ப்பாணம் – நல்லூர் கோயில் வீதியிலுள்ள தனியார் விடுதி ஒன்றுக்குள் மர்மக் கும்பல் நுழைந்து நடத்திய வாள்வெட்டுத் தாக்குதலுக்கு இலக்காகி இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
குறித்த இளைஞர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
நேற்றிரவு 7.30 மணியளவில் மூன்று மோட்டார் சைக்கிளில் வந்த இனம் தெரியாத மர்மக் கும்பல் விடுதியில் நின்றவர் மீது வாள்வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளது.
சம்பவத்தின் போது படுகாயமடைந்தவர் 21 வயதான பண்டத்தரிப்புப் பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்துள்ளது.
வாள்வெட்டுக்கான காரணம் தெரியவராத நிலையில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.