இந்தியாவின் 74 ஆவது குடியரசு தின நிகழ்வு யாழ்பாணத்தில் அமைந்துள்ள இந்தியத் துணைத்தூதரகத்தில் இன்று காலை நடைபெற்றது.
இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினரின் அணிவகுப்பு மரியாதையைத் தொடர்ந்து இந்தியத் துணைத்தூதுவர் ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரன் இந்தியாவின் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். இந்தியக் குடியரசுத் தலைவருடைய சிறப்புரையை இந்தியத் துணைத்தூவர் வாசித்தார்.
அதைத் தொடர்ந்து குடியரசு தின சிறப்பு நிகழ்வுகள் இடம்பெற்றன.
நிகழ்வில் தூதரக அதிகாரிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.