Saturday, May 4, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை அம்மன் சிலையை அகற்றுமாறு கோரும் வழக்கு ஒத்திவைப்பு!

அம்மன் சிலையை அகற்றுமாறு கோரும் வழக்கு ஒத்திவைப்பு!

0 minutes read

யாழ்ப்பாணம் – பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் வைக்கப்பட்ட நாகபூசணி அம்மன் சிலையை அகற்றுமாறு கோரி பொலிஸார் தாக்கல் செய்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இன்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது, இந்து அமைப்புக்கள் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி என்.சிறிகாந்தா, அகில இலங்கை இந்துமா மன்றம், நல்லூர் ஆதினம் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் உட்பட பல சட்டத்தரணிகள் முன்னிலையாகினர்.

குறித்த வழக்கு தொடர்பில் பொலிஸாரின் வழக்கிடு தகைமை மற்றும் நீதிமன்றத்தின் நியாயாதிக்கம் தொடர்பில் கேள்விக்குட்படுத்தி சட்டத்தரணிகள் நீண்ட சமர்ப்பணங்களை முன்வைத்திருந்தனர்.

எழுத்து மூல சமர்ப்பணங்களுக்காக வழக்கு எதிர்வரும் 04.05.2023 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More