Tuesday, April 23, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் மகள் | கவிதை | உஷா விஜயராகவன்

மகள் | கவிதை | உஷா விஜயராகவன்

1 minutes read

என் அன்பு இதயத்தில்  விழுந்த
ஒற்றை  மழைத்துளி
நீ !

உயிரே…
கண் சிமிட்டும் நேரத்தில்  ஆயிரம்
கவிதையெழுதுவேன்
இமைப்பது நீயெனில்…

என் வார்த்தைகள்
எல்லாம் தற்கொலை செய்கிறது கன்னியவள்
காந்தவிழிக்கு முன்

உன் புன்னகையால்
இருள் கூட மெழுகுவர்த்தி
ஏற்றுகிறது

கண்களால் கைதியாக்கி மனதால் சிறைபிடித்தாய்
என்னவளே !
பொறுமையின் எட்டா சிகரமானவளே !

அன்பிற்கு அடைக்கலமானவளே….
உன்னுடன் இருந்த
அந்த இனிமையான
பொற்காலங்கள்
இந்த  தனிமையில்
தான்  தெரிகிறது
எதை இழந்தேன் என்று!

யுகங்களை கூட
சுகங்களாக கழித்திடுவேன்
உன் முகம் பார்த்தால்….

நீ  இறைவன் படைத்த அதிசயமா ?
இல்லை ரவிவர்மாவின்
ஓவியமா ?

விடை தெரியாது தவிக்கிறேனடி….

கவிதை : உஷா விஜயராகவன்

கலை : தன்யஸ்ரீ

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More